தமிழ் ஈழம்..
சொந்த மண்ணில்
மனிதர்களாய்
வாழமுடியாத
ஈழத்தமிழர்களின்
தவிப்பு
பிறந்த மண்ணில்
அனாதைகளாய்
ஆனார்கள்
தமிழ் நாட்டு
மண்ணில்
அகதிகளாய்
ஆனார்கள்
இனவெறி தாக்குதல்
இன்னமும்
அடங்கலியே
இலட்சம்பேரு
அழுதகுரல்
உலகத்துக்கு
கேக்கலியே
அவர்களை
தமிழர்களாய்
பார்க்க வேண்டாம்
குறைந்தபட்சம்
மனிதர்களாய்
பாருங்கள்
ஈழத்தமிழனின்
அழுகையை நிறுத்த
விஷப்பால்
கொடுத்தாள்
இந்தியத் தாய்
இந்தியாவில்
தயாரிக்கப்பட்ட
ஆணிகளைக்
கொண்டு
சிலுவையில்
அறையப்பட்டான்
ஈழத்தமிழன்
பிஞ்சு
குழந்தைகளின்
நெஞ்சை பிளந்தன
குண்டு மழை
கர்ப்பினிப்
பெண்களுக்கு
கட்டாய கருக்கலைப்பு
போர் நிறுத்த
நாடகத்தில்
அரசியல்
சகுனிகளின்
பகடைக் காய்களாய்
ஆனார்கள்
ஈழமக்கள்
இரைதேடும்
பறவைகூட
சாயும் காலம்
வீடுசெல்லும்
உறவை தேடும்
ஈழத்தமிழன்
எப்போது வீடு
செல்வான்
ஈழ மண்ணில்
புதைக்கப்பட்டு என்
தமிழர்கள்
விதைக்கப்பட்ட
விதைகளாய்
வெளியே
வருவார்கள்
தமிழ் ஈழம்
நனவாகும்
நாளும்வரும்
காற்றலையில்
தமிழோசை
கானம் வரும்...
Subscribe to:
Post Comments (Atom)

உணர்வுகள் துல்லியமாக வெளிப்பட்டுள்ளன.
ReplyDeleteநல்ல பதிவு.
நன்றி நண்பா
ReplyDelete