Friday, March 20, 2009

தமிழ் பழமொழிகள்

அந்தி மழை அழுதாலும் விடாது
அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்
அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை
ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு
இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்
எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
களை பிடுங்காப் பயிர் காற்பயிர்
குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்
குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?